Skip to main content

நம் பொறுப்பு


நாம் கருத்துபரிமாருவது நம் மனதின் வெளிப்பாடாக பல வேளைகளில் அமைந்துவிடும்!
ஒரு தனிமனிதனின் தவறையோ, குற்றத்தையோ பகிரங்க படுத்தி விவாதம் செய்வதற்க்கானதல்ல ஊடகம்!
பொதுவாழ்வில் உள்ளவர்களின் கொள்கைகளை, கொள்கை சறுக்கல்களை, சந்தர்ப்பவாதங்களை, அயோக்கியத்தனங்களை தட்டி கேட்கலாம், அதை விமர்சிக்கலாம்....இதனால் சம்மந்தப்பட்டவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ளலாம்.....மாற்றம் ஏற்படலாம்....சமுதாயத்தில்...ஏன் உலக அளவில் நாம் கண்டுவருவது இத்தைகைய நடைமுறைகள்!!!அதுவே ஊடகத்தின் சிறப்புகளில் ஓன்று!
நாம் ஒரு இயக்கத்தையோ, கட்சியையோ, அதன் கொள்கைகளையோ அல்லது முடிவுகளையோ வைத்து விமர்சிக்கும்போது அதனை வெறுப்பாகவும், தனிமனித தாக்குதல் போலவும் வியாக்கியானம் செய்வது, அவர்களின் பக்குவத்தையும், மனப்பாங்கையுமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது!
நாம் சொல்வதில் கோளாறு உள்ளது என்று நினைப்பவர்கள் முதலில் தங்கள் புரிதலில் உள்ள கோளாறை சரி செய்வது நன்று.....
# நாம் எதை சொல்கிறோம், செய்கிறோம் என்பதற்கு மட்டுமே நாம் பொறுப்பு...உங்கள் புரிதல்களுக்கு அல்ல!!!

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ஒரு பார்வை...

தீபாவளி வாழ்த்துக்கள்! ​ ஒரு பார்வை .....       இந்திய நாடு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கே வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் உலகறிந்ததே....   அதற்க்கு ஒரு காரணம் சிலபல ​ முஸ்லிம்களிடம் இல்லாத சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், நட்புணர்வு போன்றவைகளே...   முஸ்லிம்களுக்கு இரு திருவிழாக்கள் மட்டுமே உள்ளன, மார்க்க அடிப்படையில். நோன்புப்பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள்! இவை தவிர கந்தூரி விழாக்கள், மிலாது விழாக்கள், தர்காஹ்க்களில் நடைபெறும் ஆண்டுவிழாக்கள், நல்லடியார்கள் என்போருக்கான நினைவு பெருநாட்கள் அனைத்துமே மார்க்க அடிப்படையில் வழிகேடுகளே!!! இப்படி நம்புவதும் அதன் அடிப்படையில் நடப்பதும் ஈமான் கொண்ட முஸ்லிம்களின் மீது கடமையாகும்! ஏனென்றால் மார்க்கம் ​பரிபூர்ணமாக்கப்பட்டுவிட்டது!​ ​ ​​ திருகுரான் 5:3 . ....இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்......   அதுபோலவே, பிற சகோதரர் மதத்தவர்களின் மத அடிப்படையிலான விழாக்களையோ, பண்டிகைகளை​யோ நாமும் கொண்டாட...