Skip to main content

முஸ்லிம்களின் சக்தி

முஸ்லிம்களின் சக்தி
 
 
 
 
 
 
2014 மக்களவை தேர்தல் முடிவுகள், பின்னர் நடைபெற்ற பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடத்தை தந்துள்ளது எனலாம்.
 
ஒருவருக்கொருவர் குழிவெட்டிக்கொண்டிருந்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் படுகுழியில் விழவேண்டிவரும் என்பது தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது மீண்டுமொருமுறை. ஆனாலும் முஸ்லிம் சமுதாயம் பாடம் கற்றுக்கொண்டதாய் தெரியவில்லை. பல அரசியல் கூறுகளாக கிடக்கின்றனர். பெரும்பாலான பிரிவுகளுக்கு கொள்கை காரணமல்ல, ஈகோ மட்டுமே காரணம். கொள்கை ரீதியாக பிரிந்திருந்தால் கூட அதில் ஒரு நியாயம் உள்ளது. கொள்கை மறந்து "போலி" ஒற்றுமை தேவை இல்லை. ஆனால் பிரிந்து இருப்பதற்காகவே கொள்கை வேற்றுமைகளை புனைந்தெடுப்பது நடைபெறுகிறது என்பது வேதனைக்குரியது! "நீ அப்படி செய்தால் நான் உனக்கு மாறு செய்வேன்", என்பது போல் நடந்து கொள்கின்றனர்!
 
"ஒற்றுமைக்கு பாடுபடுகிறோம்", என்று சொன்னவர்கள் கூட ஒன்றாக இனணைந்து செயல்படமுடியவில்லை என்பது மிகவும் மோசமானது! இந்நிலை தொடர்ந்தால் எதிர் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் முஸ்லிம்கள் செல்லா காசாகவே மதிக்கப்படுவர்!
முஸ்லிம் அரசியல் கட்சிகளை எதிர்த்து "அரசியல் இல்லை" என்று சொல்லும் கட்சிகள் "அரசியல்" செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்! அரசியல் செய்பவர்களும் முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு வைத்தாவது கூட்டணி அமைக்கவேண்டும் குறைந்தபட்சம்! இல்லை என்றால் பிரித்தாளும் சூழ்ச்சியை அழகாக கையாண்டு பாசிச சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முஸ்லிம்களே காரணமாகிவிடுவோம்! என்றும் திராவிட கட்சிகளின் அடிமைகளாகவே இருக்கபோகிறோமா?? சிந்திக்க கடமை பட்டுள்ளோம்...
முஸ்லிம்களின் சக்தி இந்திய நாட்டில் இன்னும் உண்டு என்பதற்கு அழகிய உதாரணம் "ஹைதராபாத் சிங்கம்" அசாதுதீன் ஒவைசி!
நம் சக்தியை நாம் உணருவோம்....
 
 
என்றும் அன்பு சகோதரன்...
சுபுகான் சுல்தான்

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...