Skip to main content

மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE

மனோபாவம் (அணுகுமுறை) - ATTITUDE




ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...அவருக்கு தீராத நோய் ஒண்ணு வந்துதாம்.
பாமிலி டாக்டர் சொன்னாராம், காட்டுல வாழும் ஓநாயின் ஈரலை தினமும் சூப் வைத்து ஒரு மாத காலத்துக்கு குடித்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்று.
 
//டும்...டும்...டும்...."நாட்டு மக்களுக்கு இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால், ஒரு ஓநாயின் ஈரலை கொண்டு வருபவருக்கு 500 பொற்காசுகள் வீதம் பரிசாக வழங்கப்படும்"...டும்...டும்...டும்...//அறிவிப்பு....நாட்டு மக்களிடம் தீயாய் பரவியது.
 
ராமுவும் சோமுவும் வேலையில்லா பட்டதாரிகள். இந்த செய்தியை கேட்டதும் காட்டுக்கு புறப்பட்டனர், பணக்காரர் ஆகவேண்டும் என்னும் வாழ்நாள் குறிக்கோளுடன்.
 
ஒரு நாள் முழுக்க அலைந்து திரிந்தும் ஒரு ஓநாய் கூட கண்ணில் படவில்லை. தளர்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து தூங்கிவிட்டனர். கொஞ்ச நேரம் கழித்து ராமு மெதுவாய் சோம்பலை முறித்து கண் விழித்து பார்த்து பயத்தால் அதிர்ச்சியானான். அவர்களை சுற்றி 10 ஓநாய்கள்! பயந்து நடுங்கி ஓடும் முன் சோமுவை தட்டி எழுப்பினான்..... "டேய் எழுந்திருடா சோம்பேறி...செத்தோம்டா நாம".
 
துள்ளி எழுந்த சோமு...சுற்றி நிற்கும் ஓநாய்களை பார்த்து....குதூகலத்துடன் கூவினான்.....
 
"ராமு...நாம 5000 பொற்காசுகளுக்கு அதிபதிகளாயிட்டோம்ம்ம்ம். பத்து ஓநாய்களை புடிக்கப்போறோம்....ஐ ஜாலி...." ன்னு
 
இது தான் "மனோபாவம்" என்னும் அதிசய சக்தி!
 
ராமு, பயந்தது இயற்கையானதே! ஆனால், குறிக்கோளை அடையவேண்டிய "#நேர்மறை_மனோபாவம்/அணுகுமுறை" (#POSITIVE_ATTITUDE) இல்லாததால் முடிவு நிச்சயம் 100% தோல்வியே, ஓட முற்ப்பட்டால், நிச்சயம் சாவு தான் மிஞ்சும்! "#எதிர்மறை_மனோபாவம்/அணுகுமுறை" (#NEGATIVE_ATTITUDE) நிச்சயம் தோல்வியையே தரும்.
 
ஆனால், சோமுவின் குதூகலத்தில் நம்மில் சிலருக்கேனும் ஒரு அடிமுட்டா
ள்
த்தனம் தோன்றலாம். ஆனால், சற்று சிந்தித்து பாருங்கள்....பயந்து ஓடி 100% தோற்பதைவிட, பத்து ஓநாய்களுடன் போராடி குறிக்கோளை அடைய முயற்சித்தால், வெற்றி பெற குறைந்தது 50% வாய்ப்பு உள்ளதே??? அப்படியானால் எது சிறந்தது??? 100% தோல்வியா? 50% வெற்றி வாய்ப்பா???
 
சோமுவிடம் இருந்த "நேர்மறை மனோபாவம்" (POSITIVE ATTITUDE) நிச்சயம் வேண்டும் நம்மிடையும்....வாழ்க்கையில் நம் குறிக்கோளை எட்ட!
 
தோல்வி பயம் இயற்கையானது ஆனால் தேவை இல்லாதது, துணிவுடன் போராடினால், அது வெற்றிவாய்ப்பை தரும், "#அல்லாஹ்_நாடினால்"!!!
 
உளசார்பு களைவிட(APTITUDE) அதிகமாக நம் #மனோபாவம் / #அணுகுமுறை (#ATTITUDE) தான் நம் உயர்வை (ALTITUDE) தீர்மானிக்கின்றன!
 
 
என்றும் அன்புடன் சகோதரன்,
சுபுகான் சுல்தான்

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...