Skip to main content

தமிழகத்தில் அடிக்கபோகும் அரசியல் சந்தர்ப்பவாத சுனாமிக்கள்....

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை!





அடுத்தது என்ன?? தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் "மைண்ட் வாய்ஸ்கள்" - ஒரு சுவையான கற்பனை!
(சிரிப்பதற்கு மட்டுமல்ல, இந்த அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத குணத்தை சிந்திக்கவும் தான்)
 
 
 
ஓ. பன்னீர்செல்வம் & அதிமுக வினர்
 
தப்பிச்சோம்டா சாமி....எவ்வளவு நாள் தான் மூஞ்ச சோகமாகவே வச்சிக்கிட்டு முதுகுத்தண்டு நிமிர்ந்திடுச்ச்சே ன்னு மனசுக்குள்ளால மட்டும் சந்தோஷப்படுறது....அதுமட்டுமா....இன்னைக்கு நம்மள விட எவனாவது அதிகமா அழுது சீன போட்டுரபோரான்னு கண்ணும் கருத்துமா இருக்கறது இருக்கே.....சப்பா.....மிடில...நல்ல வேளை வெளிய வந்துட்டாங்க அம்மா....
 
 
 
மு. கருணாநிதி & திமுக
 
அட கொடுமையே....கண்ணமூடுறதுக்குள்ள செல்லமகனை முதல் அமைச்சர் ஆக்கி பார்த்துரலாம்ன்னு கனவு கண்டா இப்படி மண்ணள்ளி போட்டுட்டாய்ங்களே.....என்ன செய்வேன்.....???? கொல்றாங்கய்யா கொல்றாங்க.....ஓ சாரி....அது இந்த சிட்டுவேஷக்கனுக்கான டயலாக் இல்லையோ.....யார் அங்கே.....?? கூப்பிடுங்கள் நம்ம கட்சிக்கு முதல்வர் ஸ்டாலினை.....(எப்படியோ...முதல்வர் ஆக்கிட்டோம் லா...)
 
 
ஈவிகேஎஸ். இளங்கோவன் & தமிழக காங்கிரஸ்
 
என்னடா இது இந்தம்மா வெளிய வராதுங்குற நம்பிக்கைல பன்னீர் அண்ணனோட ஆட்சில எங்கேயும் ஊழல் எதுலேயும் ஊழல் ன்னு சொல்லிபுட்டே ஸ்டாலின முதல்வர் ஆக்க புறப்பட்டோமே....இப்போ இப்படி ஆயிபோச்சே??? குஷ்புவை நம்பி அம்மாவை பகச்சுகிட்டது  தப்பாய் போச்சோ??? எல்லாம் தல எழுத்து...பேசாம ஒரு இரண்டு மாசம் தலைமறைவாகிவிட்டு "இளங்கோவன் RELOADED " ன்னு திரும்பி வந்துட வேண்டியது தான். (ராகுல் ஸ்டைல்)
 
 
தமிழிசை டெர்ரர் ராஜன் & பாஜக
 
தமிழ்நாட்டுல நிறைய மிஸ் கால் மெம்பர்ஸ் இருந்தும் கடந்த இடைத்தேர்தல்-ல 5000 ஓட்டுதான் கிடச்சுது......மோடி ஜி தான் அம்மா வெளிய வர்ற வச்சாருங்கிறதால அத சொல்லி ஒரு 30 சீட் கேட்டு கூட்டணிக்கு அச்சாரம் போட்டுற வேண்டியது தான். எவ்வளவு நாள் தான் "தண்ணி வண்டிய" நம்பி காலத்த ஓட்டுறது.... எவனும் தீண்ட மாட்டேங்குறான்....நாம வேற தமிழகத்துல ஆட்சியப்பிடிப்போம் ன்னு சவடால் விட்டிட்டு அலையுறோம். அதிமுக தொண்டர்களின் கைய கால புடிச்சு ஒரு பத்து பேரையாவது சட்டமன்றத்துக்கு அனுப்பிட்டா நாம தான் 2050-ல தமிழக முதல்வர் ன்னு "சொந்தகருத்தை" மக்களிடம் பரப்பிடலாம்....இருக்கவே இருக்கு பாரிவேந்தருடைய புதியகழிவறை.... சாரி புதியதலைமுறை டிவி
 
 
விசயகாந்த் & தேமுதிக
 
யாருடா அது அம்மா வந்ததுன்னு சொன்னது? நீ ஜெயா டிவி தானே? தூக்கி அடிசிருவ்வேன் பாத்துக்கோ.... அம்மா வரல....நான் நம்பமாட்டேன்.....அடுத்த முதல்வர் நான் தான்....ஒபாமாவ போய் சந்திப்பேன்....நம்ம தமிழ்நாட்டுக்கு சுதந்திரம் கேப்பேன்....ஆங்.....
யாருடா அது சரியா மிக்சிங் பண்ணாதது??? எல்லாம் இறங்கிடுச்சு...
 
 
வைக்கோ & மதிமுக
 
நடந்து நடந்து கால் வலிக்குது. நேத்து முளைச்சவனை எல்லாம் தமிழ்நாட்டுல பெரிய ஆள் ஆக்கி விட்டேன். அவன் என்னடான்னா ஆட்சியப்புடிப்பேன் ன்னு சொல்றான்...நம்மளால இப்போ நடக்க கூட முடியல.... எங்க போலாம்??? "தலைவர்" கிட்ட போய் சேர்ந்துடலாமா? அவர் சேர்த்துப்பார்.......இல்லே மீண்டும் "சகோதரி" கிட்டேயே போயிடலாமா? அங்க ஒருவேளை "டெர்ரர் சகோதரி" இருந்தால்??? பரவா இல்லை....நமக்கு என்ன மானம் மருவாதையா முக்கியம்??? நடக்க ரெண்டு பிளாட்பாரம் அமைத்து தந்தா போதுமே?? வாழ்க அதிமுக! வாழ்க திமுக!!! சும்மா இருக்கட்டும்...சொல்லி வைப்போம்...பின்னால் உதவும்!!!)
 
 
வைத்தியர் ராமதாஸ் & பாமக 
 
நான் சொல்றவரு தான் முதலமைச்சர்! என் குட்டிச்செல்லம் அன்புமணி தான் அடுத்த முதல்வர், அம்மா வெளியே வந்தா என்ன, அய்யா உள்ளே போனா என்ன??? நாங்கெல்லாம் ஸ்பெஷல் டிசைன்....ஏம்ப்பா....இன்னும் பத்து நிமிஷத்துல அம்மா கூட அப்பாயிண்ட்மெண்ட் வேணும்....கொஞ்சம் "மரியாதை நிமித்தமா" பேசணும்...ஒரு "வார்ட் பாய்" (?!)  சீட்டாவது தேத்திரனும்....அதுவும் வைக்கோ போறதுக்கு முன்னே நாம் முந்திக்கனும்... தேவைக்கு ஏற்ப பல்டி அடிப்பதிலும், கூட்டணி தாவுவதிலும், சொரணையே இல்லாமல் வழிவதிலும் நம்மள அடிச்சிக்க முடியுமா??? எடுர்ரா வண்டிய....

அங்கு...டெல்லியில்.....
மோடி ஜி.....

அம்மா...ஜி உள்ள போனது நம்மால, இப்போ வெளிய வந்ததும் நம்மால...அதனால, அம்மா ஜி பதவி ஏற்கும்போது ஒரு எட்டு போய் பார்த்துட்டு அதுக்கு பிறகு நம்ம மார்ஸ் சுற்றுபயணத்தை அமைக்கலாமா?? அம்மா ஜி வச்சு தான் இனி ராஜ்ய சபால ஒரு கலக்கு கலக்கணும்....நானா கொக்கா.....தமிழ் மாதா கி ஜெய்....!

 
தமிழக மக்கள் 

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.....உங்களை எல்லாம் சகிக்கிறதுக்கு பதிலா பேசாம நாமளே  போய்  ஜெயிலுக்குள்ள இருந்திறலாம் போல...எல்லா கொலைகாரனும் கொள்ளைகாரர்களும் வெளிய தான் இருக்கீங்க.....

 

 


Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...