இஸ்லாமியர்களுக்கு முதல் முதல் அடைக்கலம் அளித்த அபிசீனிய மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் ......ஒரு கிருஸ்தவர்!
அல் அமீனாக விளங்கிய முகம்மதை இறைத்தூதர் என்று உறுதிசெய்த பெரியவர் வரஹா ......ஒரு கிருஸ்தவர்!
நம்மோடு உறவோடு வாழும் நல்லுள்ளம் கொண்ட கிருஸ்தவ சகோதரர்களை "அவர்களின் நம்பிக்கைப்படி" "அவர்கள்" கொண்டாடும் திருநாளில் வாழ்த்த மனமில்லையென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே????
தஃவா என்பது குற்றம்சுமத்தி புண்படுத்துவதல்ல, அழகிய முறையில் தீய்மையை தடுத்து நன்மையை ஏவுவதாகும். அழகிய தாஃவா செய்ய முதலில் நம்மை அவர்கள் மதிக்கும் பொருட்டு நடந்திட வேண்டும்.
மாற்றுமத கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை, வாழ்த்து சொல்வதால் “மட்டுமே” மதநல்லிணக்கம் வளர்ந்துவிடும் என்றும் நம்பவுமில்லை.
வாழ்த்துவதும் வாழ்த்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. எப்படி வாழ்த்துவது கட்டாயமில்லையோ , அதுபோலவே "வாழ்த்தவே கூடாது" என்று சொல்வதிலும் அர்த்தமில்லை.
பல இமாம்கள் வாழ்த்துவதற்கு எதிராக பத்வாக்கள் வழங்கினாலும், குரானையும் ஹதீஸையும் "மட்டுமே" பின்பற்றுபவர்களை அவை கட்டுப்படுத்தாது, குரானும் ஹதீஸும் தடுக்காத ஒன்றை மனித வியாக்கியானங்கள் தடுக்கும் போது. வாழ்த்துவதென்பது மார்க்கம் சார்ந்ததன்று! உலகவிஷயம்! யாரும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி , இபாதத்தாக, பர்ளாக, சுன்னத்தாக வாழ்த்துவதில்லை. வீணாக இதற்குள் மார்க்கத்தை புகுத்தி இஸ்லாமியர்களை பகுத்தறிவற்றவர்களாக, குறுகிய மனம்படைத்தவர்களாக காட்டவேண்டாம்.
மற்றவர்கள் நம் பெருநாட்களுக்கு வாழ்த்து சொல்லும்போது எப்படி அவர்கள், அவர்களின் மாற்றுக்கொள்கையை விட்டுவிடுவதில்லையோ, அதுபோலவே நாம் பிறருக்கு வாழ்த்து சொல்லும்போது நம் ஈமானும் சத்திய கொள்கையும் வலுவிழந்துவிடுவதில்லை! ஏனைய மதத்தவர்களைவிட இஸ்லாமியர்கள் ஈமானில் வலுவுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை!
அல்லாஹ் யாரை பெறவும் இல்லை பெற்றெடுக்கப்படவும் இல்லை" என்பது அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கை! அந்த நம்பிக்கை நாம் பிறரின் நம்பிக்கை சார்ந்த பண்டிகையில் அவர்களுக்கு வாழ்த்துச்சொல்வதால் தகர்ந்து நாமும் "காபிர்களாகிவிடும்" என்ற வியாக்கினத்தையே எதிர்க்கிறேன். அப்படி வாழ்த்துபவர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பொதுத்தளத்தில் வசைபாடும் சிறுமதியாளர்களுக்கு எதிரான பதிவே இது!
பேஸ்புக்/வாட்ஆப் இல் அக்கவுண்ட் இருந்துவிட்டாலே, மற்றவர்களின் ஈமானை குறைகூறும் அதிகாரம் கிடைத்துவிட்டது என்று எண்ணும் போராளிகளுக்கு எதிரான பதிவு இது!
நம் கொள்கையை புரிந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் நம் வீட்டு பெருநாள் விருந்தில் கலந்துகொண்டு நட்போடு தொடர்கிறார்கள்! அந்த புரிந்துணர்வு கூட நம்மவர்களிடம் இல்லையே!? அவர்களின் விழாக்களுக்கு விருந்துண்ண செல்ல வேண்டாம்....ஆனால் யாராவது வாழ்த்தினால், பொதுவெளியில் அதை விமர்சித்து அவர்களை சங்கடப்படுத்தாமலாவது இருக்கலாமே!!???
நம்மவர்கள் எப்போது தான் உணர்ச்சிவசப்படுவதில் இருந்து..... சிந்தித்து பகுத்துணரும் நிலைக்கு வருவார்களோ என்று ஏக்கமாய் உள்ளது!!!!
அடுத்தவர் ஈமானை உரசிப்பார்த்து பத்வா வழங்கும் அருவருப்பை நிறுத்துங்கள்! மனங்களை அறிபவன் அல்லாஹ் ஒருவனே!!!!
அன்புடன்,
சுபுகான் சுல்தான்
(2016 ல் பேஸ்புக் ல் பதிந்ததை சிறிய மாற்றங்களுடன்...)
💐💐💐💐💐💐💐
அல் அமீனாக விளங்கிய முகம்மதை இறைத்தூதர் என்று உறுதிசெய்த பெரியவர் வரஹா ......ஒரு கிருஸ்தவர்!
நம்மோடு உறவோடு வாழும் நல்லுள்ளம் கொண்ட கிருஸ்தவ சகோதரர்களை "அவர்களின் நம்பிக்கைப்படி" "அவர்கள்" கொண்டாடும் திருநாளில் வாழ்த்த மனமில்லையென்றாலும் புண்படுத்தாமல் இருக்கலாமே????
தஃவா என்பது குற்றம்சுமத்தி புண்படுத்துவதல்ல, அழகிய முறையில் தீய்மையை தடுத்து நன்மையை ஏவுவதாகும். அழகிய தாஃவா செய்ய முதலில் நம்மை அவர்கள் மதிக்கும் பொருட்டு நடந்திட வேண்டும்.
மாற்றுமத கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பதால் எந்த நஷ்டமும் ஏற்படுவதில்லை, வாழ்த்து சொல்வதால் “மட்டுமே” மதநல்லிணக்கம் வளர்ந்துவிடும் என்றும் நம்பவுமில்லை.
வாழ்த்துவதும் வாழ்த்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. எப்படி வாழ்த்துவது கட்டாயமில்லையோ , அதுபோலவே "வாழ்த்தவே கூடாது" என்று சொல்வதிலும் அர்த்தமில்லை.
பல இமாம்கள் வாழ்த்துவதற்கு எதிராக பத்வாக்கள் வழங்கினாலும், குரானையும் ஹதீஸையும் "மட்டுமே" பின்பற்றுபவர்களை அவை கட்டுப்படுத்தாது, குரானும் ஹதீஸும் தடுக்காத ஒன்றை மனித வியாக்கியானங்கள் தடுக்கும் போது. வாழ்த்துவதென்பது மார்க்கம் சார்ந்ததன்று! உலகவிஷயம்! யாரும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி , இபாதத்தாக, பர்ளாக, சுன்னத்தாக வாழ்த்துவதில்லை. வீணாக இதற்குள் மார்க்கத்தை புகுத்தி இஸ்லாமியர்களை பகுத்தறிவற்றவர்களாக, குறுகிய மனம்படைத்தவர்களாக காட்டவேண்டாம்.
மற்றவர்கள் நம் பெருநாட்களுக்கு வாழ்த்து சொல்லும்போது எப்படி அவர்கள், அவர்களின் மாற்றுக்கொள்கையை விட்டுவிடுவதில்லையோ, அதுபோலவே நாம் பிறருக்கு வாழ்த்து சொல்லும்போது நம் ஈமானும் சத்திய கொள்கையும் வலுவிழந்துவிடுவதில்லை! ஏனைய மதத்தவர்களைவிட இஸ்லாமியர்கள் ஈமானில் வலுவுடையவர்கள் என்பது உலகறிந்த உண்மை!
அல்லாஹ் யாரை பெறவும் இல்லை பெற்றெடுக்கப்படவும் இல்லை" என்பது அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கை! அந்த நம்பிக்கை நாம் பிறரின் நம்பிக்கை சார்ந்த பண்டிகையில் அவர்களுக்கு வாழ்த்துச்சொல்வதால் தகர்ந்து நாமும் "காபிர்களாகிவிடும்" என்ற வியாக்கினத்தையே எதிர்க்கிறேன். அப்படி வாழ்த்துபவர்களை ஏளனமாகவும், இழிவாகவும் பொதுத்தளத்தில் வசைபாடும் சிறுமதியாளர்களுக்கு எதிரான பதிவே இது!
பேஸ்புக்/வாட்ஆப் இல் அக்கவுண்ட் இருந்துவிட்டாலே, மற்றவர்களின் ஈமானை குறைகூறும் அதிகாரம் கிடைத்துவிட்டது என்று எண்ணும் போராளிகளுக்கு எதிரான பதிவு இது!
நம் கொள்கையை புரிந்து கொண்ட மாற்று மத நண்பர்கள் நம் வீட்டு பெருநாள் விருந்தில் கலந்துகொண்டு நட்போடு தொடர்கிறார்கள்! அந்த புரிந்துணர்வு கூட நம்மவர்களிடம் இல்லையே!? அவர்களின் விழாக்களுக்கு விருந்துண்ண செல்ல வேண்டாம்....ஆனால் யாராவது வாழ்த்தினால், பொதுவெளியில் அதை விமர்சித்து அவர்களை சங்கடப்படுத்தாமலாவது இருக்கலாமே!!???
நம்மவர்கள் எப்போது தான் உணர்ச்சிவசப்படுவதில் இருந்து..... சிந்தித்து பகுத்துணரும் நிலைக்கு வருவார்களோ என்று ஏக்கமாய் உள்ளது!!!!
அடுத்தவர் ஈமானை உரசிப்பார்த்து பத்வா வழங்கும் அருவருப்பை நிறுத்துங்கள்! மனங்களை அறிபவன் அல்லாஹ் ஒருவனே!!!!
அன்புடன்,
சுபுகான் சுல்தான்
(2016 ல் பேஸ்புக் ல் பதிந்ததை சிறிய மாற்றங்களுடன்...)
💐💐💐💐💐💐💐
Comments
Post a Comment