Skip to main content

திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!



திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட்) க்கு இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) முதலுதவி முறை!


 



  • மாரடைப்பு (HEART ATTACK - ஹார்ட் அட்டாக்) என்பது இருதயத்தின் இரத்த ஓட்டம் (CIRCULATION) தடைபடுவதால் வருவது, திடீர் "இருதய துடிப்பு முடக்கம்" (SUDDEN "CARDIAC ARREST" - கார்டியாக் அர்ரஸ்ட் )
    என்பது இருதயத்தின் மின்சார (ELECTRICITY) செயல்திறன் நிர்ப்பதனால் வருவது
    , இரண்டும் வெவ்வேறு.









மாரடைப்பு  (HEART ATTACK)
இருதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் (Veins/Arteries) கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்தம் ஓட்டம் தடைப்படுவதால் அல்லது ரத்தம் ஓட்டம் இல்லாமல் போவதால் இருதயத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், ரத்த செல்கள் அழியத் தொடங்கும். இதனால், இருதயம் பாதிக்கப்பட்டு, தனது துடிப்பை நிறுத்திக்கொள்வதே மாரடைப்பு.
 
அடைப்பு ஏற்படும் விதம்
இருதயத்தின் ரத்த நாளங்களில் (Veins/Arteries) கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் (Diameter) குறுகச்செய்வதுதான் மாரடைப்பு ஏற்பட அடிப்படைக் காரணம். இருதயத்தசைகளுக்குத் (Cardio Muscles) தேவையான பிராண வாயுவின் சமநிலையில் ஏற்படும் மாற்றம், வயது முதிர்ச்சிக்காரணமாக ரத்த நாளங்கள் பலவீனமடைவது போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பு வந்தவர்களுக்கு ஆஞ்சியோ (Angioplast) சிகிச்சை அளித்து ஸ்டென்ட் (Stent) பொருத்தப்படும். சிலருக்கு, ஸ்டென்ட்டில் ரத்தம் உறைவதாலும் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உருவாகும்.
 
திடீர் இருதயத்துடிப்பு முடக்கம்  (SUDDEN CARDIAC ARREST)
நம் இருதயத்துக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் (central Nervous system) இருந்தும் இருதயத்துக்கு உள்ளிருந்தும் மின்னோட்டம் (Electric signal) வருகிறது. சில காரணங்களால் இந்த மின்னோட்டத்தில் ஏற்ற இறக்கங்கள் (Fluctuations) ஏற்படும்போது, இருதயத்துடிப்பு திடீரென அதிகரித்தும் குறைந்தும் தாறுமாறாகச் செயல்படுகிறது. இதனால், ஒருகட்டத்தில் நமது இருதயம் சட்டென்று தன் துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. இந்த நிலையையே திடீர் இருதயத்துடிப்பு முடக்கம் (Sudden cardiac arrest) என்பார்கள். மாரடைப்பினாலும் இருதயச் செயலிழப்பினாலும் (Heart failure) திடீர் இருதயத்துடிப்பு முடக்கம்  ஏற்படும். பொதுவாக, மரணம் அடைபவர்கள் அனைவருக்குமே கடைசி நேரத்தில் திடீர் இருதயத்துடிப்பு முடக்கம் ஏற்படும். எனவே, இதனை மரணத்தின் நுழைவுவாயில் என்றுகூட சொல்லலாம்.
இருதயத்துடிப்பின் திடீர் நிறுத்தத்தால், உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் தடைப்படுகிறது. தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் தடை ஏற்படுவதால் மயக்க நிலைக்குச் சென்று, சுயநினைவு இழக்கும் நிலை ஏற்படுகிறது. 
 
வேறுபாடு அறிவது எப்படி?
மாரடைப்பு ஏற்படும்போது முதலில் நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான வலி (நெஞ்சைப் பிசைகிற மாதிரியோ, அழுத்துகிற மாதிரியோ வலி) ஏற்படுவது போல தோன்றும். இந்த வலி, கழுத்து மற்றும் இடது கை பகுதிகளில் பரவும், ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். இருதயத்துடிப்பு இருக்கும், மூச்சுத்திணறல் உண்டாகும். வியர்த்துக் கொட்டி, மயக்கம் வரும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்தே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அறியமுடியும். அதாவது மாரடைப்பு வந்தவர்கள் நெஞ்சு வலியைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு சுயநினை வோடுதான் இருப்பார்கள். எனவே, உடனடியாக ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, இருதய அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு வசதி உள்ள மருத்துவ மனைக்குச் சென்றால், அங்கே மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகள் அளித்து உயிரைக் காப்பாற்றுவர்.
திடீர் இருதயத்துடிப்பு முடக்கம், மாரடைப் பைவிடவும் அபாயகரமானது. ஏனெனில், எந்தவித அறிகுறியும் இல்லாமல், திடீரென ஒருவர் நிலைகுலைந்து, மயக்க நிலையில் தரையில் சாய்ந்தால் அது திடீர் இதயத்துடிப்பு முடக்கமாக இருக்கலாம்.
 





  • 7.5 லட்சம் இந்தியர்கள், வருடந்தோறும், மாரடைப்பால் உயிரிழக்க நேரிடுகின்றனர்!!

  •  
  • மாரடைப்பால் ஏற்படும், 80% உயிரிழப்புகள் மருத்துவமனை அல்லாத இடங்களில் தான் நேரிடுகிறது.


  •  
  • ஒரு உயிரைக் காப்பாற்ற, நீங்கள் அவசியம் மருத்துவராக இருக்க வேண்டியதில்லை. இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION)  என்ற உயிர் காக்கும் முதலுதவிக்கு தக்க பயிற்சி மட்டும் போதுமானது.

     
  • 1%த்திற்கும், குறைவான மக்களுக்குத்தான், CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION) என்ற இருதய இயக்க மீட்பு பற்றி தெரியும் என்கிறது ஆய்வு.
  • இருதய இயக்க மீட்பு CPR (CPR – CARDIO PULMONARY RESUSCITATION)  என்பது உயிரை காப்பாற்றும் முதலுதவியாகும்.

     
  • CARDIAC ARREST  என்ற இருதய செயலிழப்பில்.... இருதயம் முற்றிலும் செயலிழப்பதால், உடலின் அனைத்து பாகங்களிலும் இரத்த ஓட்டம் மற்றும் O2 தடைபெறுகிறது.


  •  
  • மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேலாக, O2 மற்றும் இரத்த ஓட்டம் தடைபட்டால் மயக்கதிலை மற்றும் கோமா ஏற்படும்.


  •  
  • தாமதிக்கும், ஒவ்வொரு நிமிடமும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் 10% குறைந்து கொண்டே இருக்கும்.


  •  
  • ஒவ்வொரு நிமிடமும், 20-30% ரத்த ஓட்டத்தை, CPR அதிகரிக்கிறது.


  •  

     
  • முதலுதவியின் மூன்று முக்கிய நோக்கங்கள்..

  1. உயிர் பாதுகாத்தல்
  2. நோய் தீவிரமடைவடைதை தவிர்த்தல்
  3. நோயை குணப்படுத்துவதை ஊக்குவித்தல்.

  
  • முதலுதவியின் மிக முக்கியமான விதிகள்...
DR’S ABCD எனப்படும், (DANGER, RESPONSE, SHOUT), (AIRWAY, BREATHING, CIRCULATION, DEFRIBILLATION) என்பதன் சுருக்கமாகும்.

      
சில விதிமுறைகள் (DR’S)

  
  1. DANGER - (APROACH SAFELY) : முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல். சுற்றும் முற்றும் ஏதாவது ஆபத்து (எ.கா. மின்சாரம்) எஞ்சியுள்ளதா என்பதை ஆராயவேண்டும்

  2.  
  3. RESPONSE – (CHECK RESPONSE) : பாதிக்கப்பட்டவரை தோளில் தட்டி அழைக்க வேண்டும், அவர் உணர்வுடன் உள்ளாரா என்று தெரியும் பொருட்டு. பாதிக்கப்பட்டவரின் மூச்சு மற்றும் துடிப்பை பரிசோதனை செய்யவேண்டும்.


  4.  
  5. SHOUT – (SHOUT FOR HELP) : உணரவில்லை என்றால் உடனடியாக உதவிக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். AUTOMATED EXTERNAL DEFIBRILLATION (AED) என்னும் இருதய இயக்க மீட்பு தானியங்கி கருவியை கொண்டுவருமாறு “குறிப்பிட்டு” சொல்லவும் கட்டாயமாக. உங்களுடன் வேறு நபர்கள் இருப்பின், முடிந்தால் மருத்துவ உதவி அளிக்கும் நபர்களுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்துகொண்டு உங்கள் முதலுதவி தொடரவும்


  6.   
  1. இதன் பின்னரே இருதய இயக்க மீட்பு (CPR – CARDIO PULMONARY RESUSCITATION)  ஐ செயல்படுத்த வேண்டும்.

  2.   
CPR செயல்முறை (ABCD)

 
 


 

     
  1. AIRWAY - நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது தலையை நிமிர்த்த வேண்டும். காற்று மூக்கு வழி நுரையீரலுக்கு எளிதாக செல்லும் விதம்  தாடையை தூக்கி வைக்கவேண்டும்


     


 

     
  1. BREATHING - பாதிக்கப்பட்ட நபரின் மூச்சுக் குழாய் அடைப்பு உள்ளதா என்றும் சுவாசம் உள்ளதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும். நம் கன்னத்தை அவரின் மூக்கின் நேராக வைத்து மூச்சு காற்று வருகிறதா என்றும் அதே வேளையில் மூச்சு சத்தம் வருகிறதா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.


  2.  
  3. CIRCULATION - அதே வேளையில் அவரது கழுத்து நரம்பில் நம் இரு விரல்களை வைத்து இதயத்துடிப்பை (பல்ஸ்/PULSE) அறியவேண்டும். இதன் மூலம் மூளைக்கு இருதயத்திலிருந்து இரத்த ஓட்டம் (CIRCULATION) உள்ளதா என்பதை அறியமுடியும்


  4.  




 
 இவை அனைத்தையும் விரைந்து (இருபது செகண்டுகளுக்குள்)  செய்யவேண்டும் (MAXIMUM BY 20 SECONDS )

 
சுவாசம் இல்லை, அல்லது சீராக இல்லை, இருதயத்துடிப்பும் இல்லை என்றால் அடுத்த உதவியை தொடரவும், அதுதான் இருதய இயக்க மீட்பு (CPR – CARDIO PULMONARY RESUSCITATION)  

  • பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து (MOUTH TO MOUTH BREATHING), 5 நொடி இடைவெளியில், 2 முறை காற்றை ஊதி (LIFE BREATH) உள்செலுத்த வேண்டும். ஊதும்போது பாதிக்கப்பட்டவரின் நெஞ்சு "உயர்ந்து தாழ்வதை" கவனிக்கவும் 

     


     
  • பிறகு நெஞ்சின் மீது அழுத்தி (CHEST COMPRESSION) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும்.  

  •  
  • மார்பின் மையப்பகுதியில், கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, நிமிடத்திற்கு 100-120 முறை என்ற அளவில், 5-6 cm ஆழ அழுத்தங்களை 30 முறை தர வேண்டும்.

     


     


  •  



     
  • முப்பது முறை இருதய அழுத்தங்களை (CHEST COMPRESSION) தந்த பிறகு, 2 முறை LIFE BREATH தரவேண்டும். 30:2 


  •  
  • மருத்துவ உதவி கிட்டும்வரை, விடாமல் CPR செய்யவேண்டும்.

     
  • BLS – BASIC LIFE SUPPORT, என்ற அடிப்படை உயிர்காக்கும் வழிமுறையின் மூலம், மரணங்களைத் தடுக்க முடியும். ALS – ADVANCED LIFE SUPPORT என்பதில், ABC யுடன் ஒரு D யையும் DEFIBRILLATION  சேர்கிறது.

  •  
  • AUTOMATED EXTERNAL DEFIBRILLATION (AED) என்னும் இருதய இயக்க மீட்பு தானியங்கி கருவியை உபயோகித்து பாதிக்கப்பட்டவரின் இருதயத்துக்கு அதிர்ச்சி கொடுத்து மீட்க்கும் முறைதான் டேபிரிபிள்ளையின் எனப்படுவது. மருத்துவ உதவி கிடைத்ததும் இதை செயல்படுத்திடவேண்டும்

  •  


    என்றும் அன்புடன்,
    சுபுஹான் சுல்தான்




















        Comments

        Popular posts from this blog

        திருமண துஆ

        # திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

        ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

        ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

        இத்தா

        இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...