Skip to main content

சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா?

சஹாபாக்களை "பின்பற்றுவது" மார்க்க கட்டாயமா?
 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு...
 
 
 
அன்பு சகோதரர்களே....
 
அல்லாஹ்வின் வேதத்தையும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் பற்றிப்பிடித்துகொள்ளும்வரை நாம் வழிதவற மாட்டோம் என்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டுள்ளோம்.
 
குரான் மட்டும்போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் நிச்சயம் வழிகேட்டிலேயே சென்று சேருவர்! ஏனென்றால், ரசூல்(ஸல்) அவர்கள் குரானாகவே வாழ்ந்தார், குரானை சரியாக விளங்கிக்கொள்ள ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை இன்றியமையாதது! எனவே குரானும், நபிவழியும் வஹியே!!
 
எப்படி குரான் என்னும் அல்லாஹ்வின் வேதம் ரசூல்(ஸல்) அவர்களின் வழியாக உலகில் இறக்கப்பட்டு சகாபாக்கள் வழியே நமக்கு கிடைக்கப்பெற்றதோ, அதுபோலவே நபி வழியும் கிடைக்கபெற்றுள்ளன! இரண்டையும் பின்பற்றத்தக்கது என்று நம்பாதவன் முஸ்லிமாக இருக்கமுடியாது!
 
குரான் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவை இல்லை என்று சொல்லும் வழிகேடர்கள் ஒருபுறம், குரான் ஹதீஸ் மட்டும் போதாது....முன்னோர்களின் தரீக்காக்களும் வேண்டும் நேர்வழிபெற என்று நம்பி இஸ்லாமிய அடிப்படைகளிலேயே குழம்பியுள்ள கூட்டம் மறுபுறம்...இதற்கிடையில் சஹாபாக்கள் எப்படி மார்க்கத்தை விளங்கியிருந்தனரோ, அப்படி தான் நாமும் விளங்கவேண்டும் என்று இஸ்லாம் சொல்லாத வழிமுறையை செயல்படுத்தும் வேறொரு கூட்டமும் நிலவில் உள்ளது. சஹாபாக்களும் மனிதர்களே....அவர்களை மதிக்கவேண்டும், அவர்களில் ஏற்றத்தாழ்வு காட்ட கூடாது, அவர்களின் தியாகங்களில் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாமே அல்லாமல், அவர்களை பின்பற்றவா இஸ்லாம் நமக்கு சொல்லியுள்ளது??? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
 
​எல்லா நபிமொழிகளும் நபிவழிகளும் சஹாபாக்கள் மூலமாகவே நமக்கு கிடைக்கபெற்றுள்ளது. யாரும் மாற்றுக்கருத்து கொள்ள இயலாது. சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள், என்ன செய்தார்கள், எவற்றையெல்லாம் அங்கீகரித்தார்கள், எவற்றையெல்லாம் தடுத்தார்கள், எவற்றை எல்லாம் பற்றி மவுனம் காத்து மக்களே முடிவு செய்துகொள்ள விட்டார்கள் போன்ற செய்திகளை சஹாபாக்கள் அடுத்த தலைமுறையினருக்கு பகிர்ந்தனர், தாபிஈன்கள், தபாதாபீஈன்கள் வழி நமக்கு கிடைத்துள்ளன இந்த அரும் தகவல்கள். அவற்றை ஆராய்ந்து குரானுக்கு முரண்படமால் இருந்தால் அதை நாம் பின்பற்றவேண்டும்...
 
அல்லாமல், ரசூல்(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்ததால் மட்டுமே...சஹாபாக்கள் என்னவெல்லாம் செய்தார்களோ அவற்றை போலவே நாமும் செய்யவேண்டும் என்பது மார்க்க கட்டளையல்ல! அவர்களின் புரிதல்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் பல வேளைகளில் தவறாக கூட இருந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு சொல்லி காட்டுகிறது. ஒரு எடுத்துக்காட்டு - "தமத்ஊ ஹஜ்" பற்றிய கருத்து நபிவழிக்கு மாற்றமாக உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் கூட இருந்துள்ளது. சரியான புரிதல் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு இருந்துள்ளது. சஹாபாக்களுக்கு கூட ஹதீஸ்களை விளங்குவதில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்பது நிதர்சனமான உண்மை! எனவே புரிதல்கள் விஷயத்தில் சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்பது அர்த்தமற்ற வாதம்!
 
இல்லை சஹாபாக்கள் மூலம் நமக்கு கிடைக்கபெற்ற செய்திகளை நம்பும்போது, அவர்களின் புரிதல்களையும் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொன்னால், தாபிஈன்கள், தபாதாபீஈன்கள் ஆகியோரையும் நாம் பின்பற்றவேண்டிவரும். ரசூல்(ஸல்) அவர்களுடன் வாழ்ந்த சஹாபாக்களை ஓட்டிவந்த தாபிஈன்கள் சஹாபாக்கள் எப்படி ஹதீஸ்களை விளங்கியிருந்தனர் என்று நேரடியாக அறிந்திருந்தனர். அதுபோலவே, தாபிஈன்கள் சஹாபாக்களை பின்பற்றி வந்திருந்தால், அவர்களுடன் அடுத்து தொடர்புடைய தபாதாபீஈன்கள் கூட தாபிஈன்களை அப்படியே பின்பற்றியிருப்பர். அப்படியானால் சஹாபாக்களுடன் தாபிஈன்கள், தபாதாபீஈன்கள் ஆகியோரையும் பின்பற்றவேண்டும், அவர்கள் சொன்ன வியாக்கியானங்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வது அறிவுடைமையாகுமா???
 
செய்தியை ஏற்றுக்கொள்வோம், அவை ரசூல்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள்! ஆனால், ரசூல்(ஸல்) அவர்களுடையது அல்லாத வியாக்கியானங்களை பின்பற்றவேண்டியதில்லை! அப்படி நமக்கு கட்டளையும் இல்லை! அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமையும் சிந்தித்து... ஆராய்ந்து மார்க்கத்தை எற்றுக்கொளவும் பின்பற்றவுமே ஏவியுள்ளான்! பகுத்தறிவை போற்றும் மார்க்கம் இஸ்லாம்!
 
சிந்தித்தும் தெளிவில்லாதவர்கள்...."தற்காலத்தில்" வாழும் அறிஞர்களின் உதவியை பெற்று, புரியாததை கேட்டு விளங்கிகொள்ளலாமே அல்லது முடிவு செய்யலாமே அல்லாமல், முன்னோர்களின் கருத்துக்களை "தக்லீது" செய்ய கூடாது, அது சஹாபாக்கள் ஆனாலும்!!!
 
அல்லாஹ்வின் பாதையில் மார்க்கத்தை உயர்த்திய சத்திய சஹாபாக்கள், தாபிஈன்கள், தபாதாபீஈன்கள், இமாம்கள், மற்றும் இறைநேசர்களாகிய நம்மனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.....
 
வஸ்ஸலாம்
 
என்றும் அன்பு சகோதரன்,
 
சுபுகான் சுல்தான்

Comments

Popular posts from this blog

திருமண துஆ

# திருமண _ துஆ   //அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம வஹவ்வா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன நூஹிவ் வஃபாரிஸா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன இப்ராஹீம வஸாரத்த அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன மூஸா வஸஃப்ஃபூரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அய்யூப் வரஹீமா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன யூசுஃப் வசுலைஹா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன முஹம்மதின் வஹதீஜதுல் குரா , வஆயிஷத்தத் துஹ்ரா அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வஃபாதிமத அலைஹிமஸ்ஸலாத்து வஸ்ஸலாம்   அல்லாஹும்மா பாரிக் லஹுமா பிர்ரிபாயி வல் பனீன் //   * பொருள்:     ***அல்லாஹ்வே   ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா ( அலை) ஆகியோருக்கு மத்தியில் இணைப்பை...

ஹஜ்ஜத்துல் விதா உரை - Prophet Muhammad's (PBUH) Farewell Sermon

ஹஜ்ஜத்துல் விதா உரை மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது. மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது. அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...