Skip to main content

Posts

Showing posts from June, 2015

இஸ்லாம் கூறும் நல்லடியார்கள்!

இஸ்லாம் கூறும் நல்லடியார்கள்! அன்பு சொந்தங்களே , அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்கத்துஹு             கிறிஸ்தவர்கள் கடவுளர்களாக வழிபடும் ஏசு கிறிஸ்து மற்றும் அவரது தாயாரான  " கன்னி மாதா" மேரி அவர்களையும் பற்றி அவர்களது புனித நூலான பைபிளைவிடவும் மிக அதிகமாக நமது இறை வேதம் திருகுர்ஆன் சிறப்பித்து கூறுகிறது.   திருகுர்ஆன்   சிறப்புமிக்க நபிமார்களாக நமக்கு எடுத்து   காட்டுபவர்களுள் மிக முக்கியமானவர்கள் நபி ஈசா  ( அலை) அவர்கள். நபி ஈசா  ( அலை) அவர்களை குரானின் பல    இடங்களில்   சிறப்பித்துள்ளான். ஒரு கன்னியின் வயிற்றில் கருவாய் பிறந்த   அவர்களது பிறப்பை ஆதம்  ( அலை) அவர்களது படைப்புக்கு நிகராக சொல்லிகாட்டுகிறான் அல்லாஹ். கன்னியான மரியம்  ( அலை) அவர்களிடத்தில் நன்மாராயம் கூறுகையில் அல்லாஹ்   எப்படி கூறியுள்ளான் பாருங்கள்....   // திருகுர்ஆன் , சூரா   ஆலே இம்ரான்  -   3:42   ( நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் ; மர்யமே! நி...

இத்தா

இத்தா " இத்தா" (காத்திருத்தல்) என்பது விவாகரத்து பெற்ற மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு இஸ்லாம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வளையமாகும்.   விவாகரத்து பெற்ற பெண்கள் மூன்று மாதங்களும் , கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் , கர்ப்பமான பெண்கள் விவாகரத்து பெற்றாலோ , கணவனை இழந்தாலோ   குழந்தையை ஈன்றேடுக்கும்வரை மறுமணம் புரியாமல் “இத்தா” இருக்கவேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகிறது....     // திருகுரான் சூரத்துல் தலாக் 65:4 - மேலும் , உங்கள் பெண்களில் , எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால் , அப்பெண்களுக்கும் , மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும் , ´ இத்தா ´ ( வின் தவணை) மூன்று மாதங்களாகவும் , தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ( ´ இத்தா ´ வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் , மேலும் , எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். //   விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு மூன்று மாதங்களை அறிவுறுத்துவது அவள் குழந்தை பேறு ப...