Skip to main content

Posts

Showing posts from September, 2015

பாரமானதா குர்பானி???

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சொந்தங்களே....   பாரமானதா குர்பானி ???             ## அல் குர்ஆன் 108 : 1-2   ( முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம். எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக! ## அல் குர்ஆன் 6:162 எனது தொழுகை , எனது வணக்க முறை , எனது வாழ்வு , எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன ; அவனுக்கு நிகரானவன் இல்லை ; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன் ; முஸ்லிம்களில் நான் முதலாமவன் '' என்றும் கூறுவீராக!   புனித ஹஜ்ஜை முன்னிட்டு வசதிவாய்ப்புள்ளவர்கள் மீது " உழுஹிய்யா" (குர்பானி) என்னும் அறுத்து பலி இடுதல் கடமையாகும். குர்பானி தியாகத்தை வலியுறுத்தும் ஒரு இறைவழிபாடாகும் (இபாதத்)   **குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது ...